திருமணமான ஒரே மாதத்தில் நகைகளுடன் காதலனுடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் திருமணமான ஒரே மாதத்தில் கணவர் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்துடன் புதுப்பெண் ஒருவர் தனது காதலனுடன் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி மனிஷ் குஷ்வாஹா என்பவருடன் அந்தப் பெண்ணிற்கு முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த மே 27 ஆம் தேதி இரவு, அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், அந்தப் பெண் தனது காதலன் மற்றும் மற்றொரு இளைஞருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
மறுநாள் காலையில் மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர், காவல் துறையினருக்குத் தகவல் அளித்தார். வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, அந்தப் பெண் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்துடன் தப்பியோடியது உறுதியானது. இது தொடர்பாக ராஜ்காட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.