திருப்பதி லட்டுவில் டாய்லெட் கிளீனர் கெமிக்கலா? சந்திரபாபு நாயுடுவின் அதிரடி புகாரால் பரபரப்பு!
February 7, 2026

திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், கழிவறையை சுத்தம் செய்ய பயன்படும் அபாயகரமான ரசாயனம் (LABSA) கலக்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். முந்தைய ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இந்த முறைகேடு நடந்ததாகவும், இது பக்தர்களின் உயிருக்கே ஆபத்தானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி, இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறியுள்ளார். மத்திய ஆய்வக அறிக்கையில் விலங்கு கொழுப்பு எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், சிபிஐ குற்றப்பத்திரிகையில் தங்கள் கட்சி பெயர்கள் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.