திமுக மாநாட்டிற்கு சென்றபோது கோர விபத்து மற்றும் 20 பேர் படுகாயம்

திமுக மாநாட்டிற்கு சென்றபோது கோர விபத்து மற்றும் 20 பேர் படுகாயம்

திருச்சியில் நடைபெறும் திமுக மாநில மாநாட்டில் பங்கேற்க நாகப்பட்டினத்திலிருந்து வேனில் புறப்பட்ட தொண்டர்கள், தஞ்சாவூர் அருகே எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினர். விளார் புறவழிச்சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

விபத்தை கண்ட பொதுமக்கள் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துயர சம்பவம் குறித்து தஞ்சாவூர் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *