தமிழகத்தில் ஒரே நாளில் 1.3 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு மற்றும் 1035 கோடி ரூபாய் இழப்பீடு
March 16, 2026

தமிழகம் முழுவதும் நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரே நாளில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 366 நிலுவை வழக்குகளுக்கு அதிரடி தீர்வு காணப்பட்டுள்ளது. மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு நடத்திய இந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தம் 1,034.93 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட 516 அமர்வுகளில் இந்த விசாரணை நடைபெற்றது. ஓய்வுபெற்ற நீதிபதிகளின் முன்னிலையில் நடைபெற்ற இந்த முகாமில், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பொதுமக்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.