தந்தையே கணவனாகும் விசித்திரம், வங்கதேச பழங்குடியினரின் அதிர்ச்சி தரும் கலாச்சாரம்

செய்தி பிரிவு : தந்தை மகள் உறவு என்பது புனிதமானது, ஆனால் அண்டை நாடான வங்கதேசத்தின் மண்டி பழங்குடியினரிடையே நிலவும் ஒரு விசித்திரமான வழக்கம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. அங்கு இளம் பெண்கள் தங்கள் சொந்த (மாற்றான்) தந்தையையே திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. சமூக பாதுகாப்பு என்ற பெயரில் நடத்தப்படும் இந்த அவலநிலை, இன்றைய நவீன உலகில் உறவுகளின் புனிதத்தை கேள்விக்குறியாக்குகிறது. இது போன்ற செயல்கள் ஒரு பெண்ணின் வாழ்நாள் முழுவதும் மனரீதியான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த வழக்கத்தின்படி, ஒரு விதவை பெண் மறுமணம் செய்து கொண்டால், அவரது புதிய கணவர் அந்தப் பெண்ணின் மகளுக்கும் கணவராகிறார். ஒரேலா என்ற பெண் தனது மூன்று வயதிலேயே தனது மாற்றான் தந்தைக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட கொடுமையை விவரித்துள்ளார். கலாச்சாரம் என்ற பெயரில் நடக்கும் இத்தகைய மனிதநேயமற்ற செயல்கள், நாகரீக சமூகத்தில் இன்னும் மாற்றப்படாமல் இருப்பது வேதனைக்குரிய விஷயமாகும். இது போன்ற மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே பலரின் கருத்தாகும்.