ஜெய்ப்பூர் இரவு விடுதியில் பயங்கரம்: உரிமையாளரின் கோரிக்கையை மறுத்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை; கணவருக்கு ராடால் அடி

ஜெய்ப்பூர் இரவு விடுதியில் பயங்கரம்: உரிமையாளரின் கோரிக்கையை மறுத்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை; கணவருக்கு ராடால் அடி

ஜெய்ப்பூரில் உள்ள அசோக் நகர் பகுதியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் பாலியல் தொல்லை மற்றும் கொடூரத் தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது. கிளப் உரிமையாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், பவுன்சர்கள் கணவரை கொடூரமாக தாக்கியதாகவும் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். டிசம்பர் 10 ஆம் தேதி இரவு ‘கிளப் ஆல்ஃபா’-வில் இந்த சம்பவம் நடந்தது. புகார்தாரர் இரம் ஷேக், தனது கணவர் நவீத் உஸ்மானியுடன் கிளப்புக்குச் சென்றபோது, கிளப் உரிமையாளர் பரத் டாங், அவரைத் தனி அறையில் சந்திக்க ஒரு பணியாளர் மூலம் அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது.

அந்தப் பெண் அந்த அழைப்பை ஏற்க மறுத்த பின்னர், அவர் கழிவறைக்குச் செல்ல முற்பட்டபோது, பரத் டாங், மேலாளர் தீபக் மற்றும் சில பவுன்சர்கள் அவரைச் சூழ்ந்து ஆபாசமாக சைகை காட்டியுள்ளனர். கணவர் எதிர்ப்பு தெரிவித்தபோது, பவுன்சர்கள் அவரை இரும்பு கம்பியால் கடுமையாகத் தாக்கியதில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், சிசிடிவி காட்சிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *