செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஆட்டம் காணும் இந்திய ஐடி துறை மற்றும் முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி நஷ்டம்

செயற்கை நுண்ணறிவின் (AI) அசுர வளர்ச்சியால் இந்திய ஐடி நிறுவனங்களின் வணிக மாதிரி கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. கடந்த 8 வர்த்தக நாட்களில் நிஃப்டி ஐடி குறியீடு 19 சதவீதம் சரிந்ததால், முதலீட்டாளர்களின் சுமார் 5.7 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு ஆவியானது. டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்து சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஆந்த்ரோபிக் ஏஐ நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பங்கள் கோடிங் மற்றும் டெஸ்டிங் பணிகளை எளிதாக்கியுள்ளதால், இந்திய நிறுவனங்களின் தேவை குறையும் என அஞ்சப்படுகிறது. இதன் விளைவாக சென்னை மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள லட்சக்கணக்கான ஐடி ஊழியர்களின் வேலைவாய்ப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆரம்ப நிலை மற்றும் நடுத்தர நிலை ஊழியர்கள் இந்த தொழில்நுட்ப மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.