சென்னையில் வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் மீண்டும் விறகு அடுப்புக்கு மாறும் சாலையோர உணவகங்கள் மற்றும் சிறு ஹோட்டல்கள்

சென்னையில் வணிக ரீதியிலான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் தொடர் விலை உயர்வு காரணமாக சிறிய உணவகங்கள் மற்றும் சாலையோரக் கடைகள் மீண்டும் விறகு அடுப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. குறிப்பாக நவீன புகையில்லா ஸ்மார்ட் அடுப்புகள் எரிபொருள் செலவை ஐம்பது சதவீதம் வரை குறைப்பதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர். சிலிண்டர் முன்பதிவு இருமடங்காக அதிகரித்துள்ள சூழலில் விநியோக தாமதமே இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
விறகு அடுப்பில் சமைக்கப்படும் உணவுகளுக்கு வாடிக்கையாளர்களிடையே அதிக வரவேற்பு இருந்தாலும் இதில் சில உடல்நலக் குறைபாடுகளும் ஒளிந்துள்ளன. விறகு அடுப்பு சமையல் தனித்துவமான சுவையைத் தந்தாலும் அதன் புகையை நீண்ட காலம் சுவாசிப்பது ஆஸ்துமா மற்றும் நுரையீரல் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இருப்பினும் பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க சிறு குறு வியாபாரிகள் தற்போது இந்த முறையையே பாதுகாப்பான தீர்வாகக் கருதுகின்றனர்.