சுவிட்சர்லாந்தில் ஓடும் பேருந்தில் பயங்கர தீ விபத்து மற்றும் 6 பேர் உடல் கருகி உயிரிழப்பு
March 11, 2026

சுவிட்சர்லாந்து தலைநகர் பெர்ன் அருகே உள்ள கெர்சர்ஸ் பகுதியில் பயணிகளுடன் சென்ற பேருந்தில் திடீரென தீப்பிடித்தது. பேருந்து முழுவதும் தீ மளமளவென பரவியதால் பயணிகள் அலறியடித்து ஓடினர். இந்த கோர விபத்தில் சிக்கி 6 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.