சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக முகவரி மாறி வரலாற்று சிறப்புமிக்க சேவா தீர்த்தத்திற்கு சென்றது பிரதமரின் அலுவலகம்
February 13, 2026

இந்திய நிர்வாக வரலாற்றில் ஒரு மைல்கல்லாக பிரதமரின் அலுவலக முகவரி மாற்றப்பட்டுள்ளது. சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நவீன மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ‘சேவா தீர்த்தம்’ வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இனி பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய செயலகங்கள் டிஜிட்டல் வசதிகள் கொண்ட இந்த ஒரே கூரையின் கீழ் இயங்கும்.
இந்த இடமாற்றம் நிர்வாக ஒருங்கிணைப்பை மேம்படுத்தி விரைவான முடிவெடுக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திறப்பு விழாவின் போது மக்கள் நலத்திட்டங்களை அறிவித்த பிரதமர், பழைய அலுவலகங்களை ‘யுகே யுகீன் பாரத சங்க்ரஹாலயா’ என்ற அருங்காட்சியகமாக மாற்ற திட்டமிட்டுள்ளார். இது நாட்டின் நிர்வாகத்தை வெளிப்படையானதாகவும் நவீனமானதாகவும் மாற்றும் முக்கிய நடவடிக்கையாகும்.