கிசான் நிதி உதவித்தொகை உயருமா, 22வது தவணை எப்போது வரும் என்ற முழு விவரம்

செய்தி பிரிவு : பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி இந்த முறை உயருமா என்று எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஆண்டுக்கு வழங்கப்படும் 6,000 ரூபாய் நிதியில் எந்த மாற்றமும் இல்லை என்று பட்ஜெட் மூலம் தெரியவந்துள்ளது. இருப்பினும், விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 22வது தவணைத் தொகை பிப்ரவரி கடைசி வாரத்தில் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொகை விவசாயிகளின் அவசரத் தேவைகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.
இத்திட்டத்திற்காக அரசு 63,500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள நிலையில், விதிமுறைகள் தற்போது மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன. கடந்த முறை தகுதியற்ற 30 லட்சம் பேர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதால், விவசாயிகள் தங்கள் கணக்கைச் சரியாகப் பராமரிப்பது அவசியம். உங்கள் இ-கேஒய்சி (e-KYC) மற்றும் ஆதார் இணைப்பு சரியாக இருந்தால் மட்டுமே அடுத்த தவணைத் தொகை தடையின்றி உங்கள் கணக்கிற்கு வந்து சேரும்.