காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் அதிகாலையில் நிலநடுக்கம் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் அதிகாலையில் நிலநடுக்கம் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 4.6 அலகுகளாகப் பதிவானது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் பீதியடைந்து தங்கள் வீடுகளை விட்டு வீதிகளுக்கு வந்தனர். இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி ஸ்ரீநகரிலிருந்து சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹன்ஜிவேரா பாலா பகுதியில் அமைந்திருந்தது.

காஷ்மீருடன் அண்டை நாடான பாகிஸ்தானின் சில பகுதிகளிலும் இந்த அதிர்வுகள் உணரப்பட்டன. இந்த இயற்கை சீற்றத்தால் இதுவரை உயிர்ச்சேதமோ அல்லது பெரிய அளவிலான சொத்து சேதங்களோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. தற்போதைய சூழலில் நிலைமை சீராக உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *