கணவர் இறந்த 20 நாளில் 2வது கல்யாணம், மனைவியின் திருமணக் கோலத்தால் அம்பலமான பகீர் கொலைச் சதி
March 11, 2026

கர்நாடக மாநிலம் துமக்கூருவில் கள்ளக்காதலுக்காக கணவரைத் தீர்த்துக்கட்டிய மனைவி ஆஷாவின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 30 அன்று கணவர் பரமேஷ் மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய ஆஷா, போலீசுக்குத் தெரியாமல் உடலை அவசர அவசரமாக அடக்கம் செய்தார்.
ஆனால், கணவர் இறந்த 20 நாட்களிலேயே கள்ளக்காதலன் சந்திரப்பாவை அவர் திருமணம் செய்ததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் புகார் அளித்தனர். போலீசார் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்ததில், அவர் தலையணையால் அமுக்கி கொலை செய்யப்பட்டது உறுதியானது. தற்போது ஆஷா மற்றும் அவரது இரண்டாவது கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.