உஷார் தோலுக்கு நிறமூட்டும் நச்சு ரசாயனம் கலந்த வறுத்த கடலை பறிமுதல் உங்கள் உயிருக்கு ஆபத்து
December 17, 2025

கோரக்பூரில் சுமார் 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான 30 டன் நச்சுத்தன்மை கொண்ட வறுத்த கடலையை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர். மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் இருந்து வந்த இந்த கடலையில் தோல் பதனிடப் பயன்படும் அபாயகரமான ‘ஆரமைன் ஓ’ ரசாயனம் பூசப்பட்டுள்ளது.
இந்த ரசாயனம் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்துவதுடன் புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கிறது. இந்த விவகாரத்தில் மா தாரா டிரேடர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.