உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பரபரப்பு டேரில் மிட்செல் மீது பந்து வீசியது குறித்து அர்ஷ்தீப் சிங் அதிரடி விளக்கம்

குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியா நிர்ணயித்த 256 ரன்கள் என்ற இலக்கை துரத்திய கிவிஸ் அணி 159 ரன்களுக்கு சுருண்டது. ஆட்டத்தின் இடையே அர்ஷ்தீப் சிங் வீசிய பந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல் மீது பட்டதால் மைதானத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டது.
இந்த சர்ச்சை குறித்து விளக்கம் அளித்த அர்ஷ்தீப் அது தற்செயலாக நடந்தது என்று கூறினார். பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனதால் கட்டுப்பாட்டை இழந்து மிட்செல் மீது பட்டதாகவும் அதற்காக உடனடியாக மன்னிப்பு கேட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். தனிப்பட்ட சாதனைகளை விட அணியின் உலகக்கோப்பை வெற்றியே முக்கியம் என்றும் பந்துவீச்சாளர்களின் ஒருங்கிணைந்த செயல்பாடே இந்த வரலாற்று வெற்றிக்கு காரணம் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.