ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப் வொயிட் ஹவுஸில் அதிரடி திருப்பம்

ஈரான் உடனடியாக அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால் அதன் விளைவுகள் மிகவும் வலிக்கக்கூடியதாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் வாஷிங்டனில் நடத்திய முக்கிய ஆலோசனைக்கு பிறகு டிரம்ப் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதான முந்தைய தாக்குதல்களை நினைவுகூர்ந்த அவர், பேச்சுவார்த்தைக்கு வரத் தவறினால் ஈரான் கடுமையான ராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
இஸ்ரேலிய தரப்பில், ஈரானின் ஏவுகணை சோதனைகள் மற்றும் பிராந்திய அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்தும் வகையிலான ஒப்பந்தத்தையே தாங்கள் விரும்புவதாக நெதன்யாகு கூறியுள்ளார். ஈரானை ஒரு முறையான உடன்படிக்கைக்குக் கொண்டு வர முடியும் என்று டிரம்ப் நம்பினாலும், இஸ்ரேல் இது குறித்து தனது சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளது. தற்போதைய சூழலில், ஈரானின் அடுத்தக்கட்ட நகர்வை பொறுத்தே அமெரிக்காவின் இறுதி முடிவு அமையும் என்பதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.