இஸ்ரேலில் ஜெய்சங்கர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஜெருசலேமில் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். சிட்னியில் யூதர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ளப் போவதில்லை என்று இரு நாடுகளும் இந்தச் சந்திப்பின் போது உறுதிபூண்டன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. பிரதமர் மோடியின் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்ட ஜெய்சங்கர், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா எப்போதும் இஸ்ரேலுடன் நிற்கும் என்பதைத் தெளிவுபடுத்தினார். இது சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.