இரவில் இந்த ஒரு டீ குடித்தால் போதும் உடலில் இருக்கும் யூரிக் அமிலம் தானாக வெளியேறும்

உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பது தற்போதைய காலத்தில் பெரும் சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளது. சிவப்பு இறைச்சி, கடல் உணவுகள் மற்றும் அதிகப்படியான மது அருந்துதல் ஆகியவற்றால் இரத்தத்தில் பியூரின் உடைந்து யூரிக் அமிலம் அதிகரிக்கிறது. இது மூட்டு வலி மற்றும் வீக்கத்தை உண்டாக்குகிறது. இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க மஞ்சள் மற்றும் வெந்தயம் கலந்த தேநீர் சிறந்த தீர்வாக அமைகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் மற்றும் வெந்தயத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் யூரிக் அமிலத்தின் அளவை இயற்கையாகவே குறைக்க உதவுகின்றன.
இந்த தேநீரைத் தயாரிக்க ஒரு கப் தண்ணீரில் அரை ஸ்பூன் வெந்தயத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை வடிகட்டி, அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து இரவு தூங்கும் முன் குடிக்க வேண்டும். வெந்தயத்தில் உள்ள சபோனின்கள் மற்றும் மஞ்சளின் மருத்துவ குணங்கள் இரத்தத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றி மூட்டு வலியைப் போக்க வல்லவை. இயற்கையான முறையில் யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த விரும்புவோருக்கு இது ஒரு மிகச்சிறந்த பானமாகும்.