இந்திய சந்தையை அதிரவைக்க வரும் புதிய ஆடி எஸ்யுவி மார்ச் 17 அன்று அறிமுகம்

இந்திய சந்தையை அதிரவைக்க வரும் புதிய ஆடி எஸ்யுவி மார்ச் 17 அன்று அறிமுகம்

பிரபல சொகுசு கார் நிறுவனமான ஆடி, தனது புதிய எஸ்கியூ8 மாடலை மார்ச் 17-ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இந்த மாடல் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 இன்ஜின் மற்றும் 507 எச்பி ஆற்றல் கொண்ட சக்திவாய்ந்த எஞ்சினுடன் வருகிறது. இதில் பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா மற்றும் 12.3 இன்ச் தொடுதிரை போன்ற பிரீமியம் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

வாடிக்கையாளர்கள் ரூ. 5 லட்சம் செலுத்தி ‘மை ஆடி’ இணையதளத்தில் இப்போதே முன்பதிவு செய்யலாம். பாதுகாப்பிற்காக ஏர்பேக்குகள் மற்றும் பார்க்கிங் அசிஸ்ட் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் இதில் உள்ளன. கியூ8 மற்றும் ஆர்எஸ்கியூ8 மாடல்களுக்கு இடையிலான சிறந்த தேர்வாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *