விவேக் ஓபராய்க்கு வெற்றி: தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்க நீதிமன்றம் அதிரடி!

நடிகர் விவேக் ஓபராயின் ‘தனித்துவ உரிமைகளை’ (Personality Rights) பாதுகாக்க டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதன் மூலம் விவேக் ஓபராயின் அனுமதி இன்றி அவரது புகைப்படம், குரல் அல்லது வீடியோக்களை வணிக ரீதியாகப் பயன்படுத்த யாருக்கும் அனுமதி இல்லை.
சமீபகாலமாக ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலம் நடிகர்களின் உருவத்தைச் சிதைப்பது மற்றும் போலி வீடியோக்கள் பரப்பப்படுவதைத் தடுக்க அவர் இந்த சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுத்துள்ளார். ஏற்கனவே ஐஸ்வர்யா ராய், சல்மான் கான் மற்றும் ஹிருத்திக் ரோஷன் போன்ற பிரபலங்கள் இத்தகைய உரிமைகளைப் பெற்றுள்ள நிலையில், தனது பிராண்ட் மதிப்பைப் பாதுகாக்க விவேக் ஓபராயும் இந்த வரிசையில் இணைந்துள்ளார்.
இந்தத் தீர்ப்பின் மூலம் திரைத்துறையினரின் தனிப்பட்ட அடையாளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.