விளாத்திகுளம் மாணவி கொடூரக் கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைப்பு

விளாத்திகுளம் மாணவி கொடூரக் கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. கடந்த 10-ஆம் தேதி இரவு இயற்கை உபாதை கழிக்கச் சென்ற மாணவி வீடு திரும்பாத நிலையில், அடுத்த நாள் உடல் சிதைந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க நெல்லை சரக டிஐஜி சரவணன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் போலீசார், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என உறுதி அளித்துள்ளனர். இச்சம்பவத்திற்கு கனிமொழி எம்பி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, மாணவியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க துணை நிற்பதாகக் கூறியுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *