புதுச்சேரியில் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு குறைபாடு அதிமுக கடும் விமர்சனம்

புதுச்சேரியில் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு குறைபாடு அதிமுக கடும் விமர்சனம்

புதுச்சேரியில் நிலவும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க முதலமைச்சரும் ஆளுநரும் உடனடியாக பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார். மக்கள் பாதிப்படைவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க அவர் வலியுறுத்தினார்.

ஆளுநர் மாளிகை பாதுகாப்பு விவகாரத்தில் நாராயணசாமியின் இரட்டை நிலையை விமர்சித்த அன்பழகன், கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீதான தாக்குதலுக்கு தமிழக முதல்வரின் ராஜினாமாவை அவர் கேட்பாரா எனக் கேள்வி எழுப்பினார். மேலும், புதுச்சேரி விமான நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *