பதவி விலகும் கோரிக்கையால் பரபரப்பு மக்களவையில் ராகுல் காந்தி மற்றும் ரவிசங்கர் பிரசாத் இடையே கடும் மோதல்

பதவி விலகும் கோரிக்கையால் பரபரப்பு மக்களவையில் ராகுல் காந்தி மற்றும் ரவிசங்கர் பிரசாத் இடையே கடும் மோதல்

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நீக்கக் கோரும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், பிரதமர் மோடி பணிந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதிரடியாகக் குற்றம் சாட்டினார். அதானி விவகாரம் மற்றும் நாட்டின் முக்கியக் கோப்புகள் குறித்துப் பேசும்போதெல்லாம் தமது குரல் ஒடுக்கப்படுவதாகக் கூறிய அவர், பிரதமரின் இந்தச் சமரசம் நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலடி கொடுத்த பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத், பிரதமர் மோடியை யாராலும் பணிய வைக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார். ராகுல் காந்தி தனது வார்த்தைகளைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்திய அவர், தனிப்பட்ட ஈகோ காரணங்களுக்காக இத்தகைய தீர்மானங்கள் கொண்டு வரப்படுவது வேதனையளிப்பதாகக் குறிப்பிட்டார். இதனால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *