தோள்பட்டை வலியால் சுவிஸ் ஓபன் காலிறுதியில் இருந்து சாட்விக் சாய்ராஜ் மற்றும் ஷிராக் ஜோடி திடீர் விலகல்
March 14, 2026

சுவிட்சர்லாந்தின் பாசல் நகரில் நடைபெற்று வரும் சுவிஸ் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதியில் டென்மார்க் ஜோடியுடன் மோதவிருந்த சாட்விக் சாய்ராஜ் மற்றும் ஷிராக் ஷெட்டி ஜோடி போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே சாட்விக் சாய்ராஜிற்கு வலது தோள்பட்டையில் திடீரென கடுமையான வலி ஏற்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
முக்கியமான கட்டத்தில் ஏற்பட்ட இந்த காயத்தினால் இந்திய வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர். நட்சத்திர வீரர்களின் இந்த திடீர் வெளியேற்றம் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.