தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தென்னகத்தில் சூடுபிடிக்கும் சுவர் விளம்பர மற்றும் ஆட்டோ பிரச்சார போர்

தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தென்னகத்தில் சூடுபிடிக்கும் சுவர் விளம்பர மற்றும் ஆட்டோ பிரச்சார போர்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தற்போதே தேர்தல் களத்தில் மும்முரமாக இறங்கியுள்ளன. வேட்பாளர் பட்டியல்கள் இன்னும் முழுமையாக வெளியாகாத நிலையிலும், கிராமப்புறங்களில் சுவர் விளம்பரங்களை முன்பதிவு செய்வதிலும் கட்சி சின்னங்களை வரைவதிலும் தொண்டர்கள் காட்டி வரும் ஆர்வம் அரசியல் களத்தை அதிர வைத்துள்ளது.

குறிப்பாக, டிஜிட்டல் யுகத்திலும் ஆட்டோ விளம்பரங்களுக்கு ஏற்பட்டுள்ள அதீத மவுசு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரையின் சந்து பொந்துகளுக்கெல்லாம் கட்சி செய்திகளைக் கொண்டு செல்ல ஆட்டோக்களின் பின்புறம் விளம்பரம் செய்ய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இப்போதே ஆட்டோ உரிமையாளர்களிடம் அரசியல் கட்சிகள் முன்பதிவு செய்து, தங்கள் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணிகளைத் தொடங்கிவிட்டன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *