தேனியில் உணவகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் திமுக நிர்வாகி உட்பட நால்வர் கைது
March 11, 2026

தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியில் மதுபான பார் தொடர்பான முன்விரோதத்தில் திமுக மாணவர் அணி அமைப்பாளர் ஸ்டீபன் தூண்டுதலின் பேரில் உணவகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த மோதலில் இருசக்கர வாகனம் தீயிட்டு எரிக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்த வன்முறை சம்பவத்தில் காயமடைந்த மூவர் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தேவதானப்பட்டி காவல்துறையினர் திமுக நிர்வாகி ஸ்டீபன் உட்பட நான்கு பேரை அதிரடியாக கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.