தாய்லாந்து கம்போடியா இடையே போர் நிறுத்தம் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே நீடித்து வந்த எல்லை மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இரு நாடுகளும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அமைதியை நிலைநாட்ட முன்வந்துள்ளதாகவும் அவர் தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். இரு நாட்டுத் தலைவர்களின் இந்த துரிதமான முடிவைப் பாராட்டிய ட்ரம்ப், அமெரிக்காவின் தலையீடு காரணமாகவே இந்தப் பதற்றம் தணிந்ததாகக் கூறினார்.
கடந்த பதினோரு மாதங்களில் உலகெங்கிலும் உள்ள எட்டு பெரிய மோதல்களை அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளதாக ட்ரம்ப் பெருமிதத்துடன் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையால் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை அமெரிக்கா வெற்றிகரமாக கையாண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய சூழலில் அமெரிக்காவே ‘உண்மையான ஐக்கிய நாடுகள் சபை’ போல செயல்படுகிறது என அதிரடியாகக் கூறியுள்ளார்.