தனிநபர் கடன் வாங்கியவர் இறந்தால் அந்தப் பணத்தை யார் செலுத்த வேண்டும் தெரியுமா

தனிநபர் கடன் வாங்கியவர் இறந்தால் அந்தப் பணத்தை யார் செலுத்த வேண்டும் தெரியுமா

தனிநபர் கடன் வாங்கியவர் அதைத் திருப்பிச் செலுத்தும் முன்பே இறந்துவிட்டால், வங்கி முதலில் இணை விண்ணப்பதாரர் அல்லது ஜாமீன் கொடுத்தவர் யாராவது இருக்கிறார்களா என்று பார்க்கும். அவ்வாறு இருந்தால், அவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முழுப் பொறுப்பாவார்கள். யாரும் இல்லாத பட்சத்தில், இறந்த நபரின் சொத்துக்களைக் கொண்டு அந்த நிலுவைத் தொகையை வசூலிக்க வங்கி நடவடிக்கை எடுக்கும்.

சட்டப்பூர்வ வாரிசுகள் இந்தக் கடனுக்குத் தானாகவே பொறுப்பாக மாட்டார்கள். அவர்கள் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தால் மட்டுமே கடனை அடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். மற்றபடி, வாரிசுகளின் சொந்தச் சொத்திலிருந்து பணத்தை வசூலிக்க முடியாது. இருப்பினும், கடன் வாங்கியவரின் சொத்துக்களில் இருந்து வங்கியால் நிலுவைத் தொகையை ஈடுகட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *