சேவா தீர்த்த் வளாகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி நான்கு முக்கிய மக்கள் நலத்திட்டங்களுக்கு அதிரடியாக ஒப்புதல் அளித்தார்
February 14, 2026

டெல்லியில் பிரதமர் அலுவலகம், அமைச்சரவை மற்றும் தேசிய பாதுகாப்பு செயலகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ‘சேவா தீர்த்த்’ என்ற புதிய ஒருங்கிணைந்த வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். நிர்வாக தாமதத்தை குறைத்து அரசு பணிகளை விரைவுபடுத்துவதே இந்த புதிய மாற்றத்தின் முக்கிய நோக்கமாகும்.
பதவியேற்றவுடன் பிரதமர் மோடி நான்கு முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். இதில் சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை, 6 கோடி பெண்களை ‘இலட்சாதிபதி திதி’களாக மாற்றுதல் மற்றும் விவசாய உள்கட்டமைப்பு நிதியை 2 லட்சம் கோடியாக உயர்த்துதல் போன்றவை அடங்கும்.