சிட்னி கடற்கரையில் பயங்கர தாக்குதல்; மயிரிழையில் உயிர் தப்பிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான்

சிட்னி கடற்கரையில் பயங்கர தாக்குதல்; மயிரிழையில் உயிர் தப்பிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான்

சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் டிசம்பர் 14 அன்று நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். ஆஷஸ் தொடரின் வர்ணனைக் குழுவில் அங்கம் வகிக்கும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான் சம்பவத்தின்போது அதே பகுதியில் சிக்கினார். தாக்குதலின்போது பாண்டி கடற்கரையில் இருந்த உணவகத்திற்குள் தான் சிக்கிக்கொண்டதாக அவர் ‘X’-இல் (முன்னர் ட்விட்டர்) தெரிவித்தார்.

வான், தனது பதிவில் அவசரகால சேவைகளுக்கும், பயங்கரவாதியைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட குடிமகனுக்கும் நன்றி தெரிவித்தார். ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்தச் சம்பவத்தை அதிகாரப்பூர்வமாக பயங்கரவாதச் செயல் என்று அறிவித்துள்ளார். சுமார் 6:40 மணியளவில் இரண்டு ஆயுதம் ஏந்திய நபர்கள் காரில் வந்து கண்மூடித்தனமாகச் சுடத் தொடங்கியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *