சருமத்தில் ஏற்படும் தடிப்புகளை அலட்சியப்படுத்தாதீர்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும் என மருத்துவர்கள் எச்சரிக்கை

கைகளிலும் பாதங்களிலும் ஏற்படும் தோல் தடிப்புகளை நாம் பெரும்பாலும் சாதாரணமான ஒன்றாகவே கருதுகிறோம். தவறான அளவு காலணிகள் மற்றும் அதிகப்படியான அழுத்தத்தினால் சருமத்தின் இறந்த செல்கள் ஒன்று கூடி இந்த தடிப்புகளை உருவாக்குகின்றன. பலர் இவற்றை வீட்டிலேயே பிளேடு அல்லது கூர்மையான பொருட்களைக் கொண்டு அகற்ற முயல்கின்றனர், இது உயிருக்கே ஆபத்தான தொற்றுகளை ஏற்படுத்தும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு இதனால் ஆறாத புண்கள் மற்றும் அல்சர் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.
சரியான அளவு காலணிகளை அணிவது மற்றும் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவதன் மூலம் ஆரம்பத்திலேயே இதைத் தடுக்கலாம். ஆனால் தடிப்புகளில் கடுமையான வலி, சீழ் அல்லது வீக்கம் ஏற்பட்டால் உடனடியாக தோல் மருத்துவரை அணுகுவது அவசியம். மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் அல்லது சிறிய அறுவை சிகிச்சை மூலம் இதனை குணப்படுத்த முடியும். எனவே, சுய மருத்துவம் செய்வதைத் தவிர்த்து, முறையான சிகிச்சை மேற்கொள்வதே பாதுகாப்பானது.