சமையல் எரிவாயு விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என விஜய் கடும் எச்சரிக்கை

சமையல் எரிவாயு விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என விஜய் கடும் எச்சரிக்கை

தமிழகத்தில் நிலவி வரும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். மக்களின் அடிப்படைத் தேவையான உணவு சமைக்க உதவும் எரிவாயு விஷயத்தில் எந்தவித அரசியலும் இருக்கக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். குழப்பமான சூழலைச் சீர்செய்ய ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

வணிக ரீதியிலான சிலிண்டர் தட்டுப்பாடு தற்போது வீட்டு உபயோக விநியோகத்திலும் எதிரொலிப்பது சாமானிய மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை விற்பனையைத் தடுக்க அரசு அதிரடிச் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார். எண்ணெய் நிறுவனங்களுடன் பேசி தடையற்ற சிலிண்டர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *