‘குழந்தைகளுக்காக போரை நிறுத்துங்கள்’ புதினிடம் மெலனியா ட்ரம்ப் கடிதம்

‘குழந்தைகளுக்காக போரை நிறுத்துங்கள்’ புதினிடம் மெலனியா ட்ரம்ப் கடிதம்

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முயற்சிகள் செய்து வரும் நிலையில், முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கடிதம் எழுதியுள்ளார். போர் பாதித்த பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகளின் அவல நிலையைச் சுட்டிக்காட்டி, போரை உடனடியாக நிறுத்த அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இக்கடிதம் ராஜதந்திர மற்றும் அரசியல் வட்டாரங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஆகஸ்ட் 15 அன்று எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில், மெலனியா புதினை நோக்கி, ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பான மற்றும் அன்பான உலகத்தைக் காண விரும்புகிறது என்று குறிப்பிட்டுள்ளார். அடுத்த தலைமுறைக்கு இந்த நம்பிக்கையை உயிருடன் வைத்திருப்பது நமது கடமை என்றும் அவர் கூறியுள்ளார். ட்ரம்ப் மூலம் புதினிடம் அனுப்பப்பட்ட இந்த கடிதத்தில், போரின் நிச்சயமற்ற தன்மையிலிருந்து குழந்தைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க மெலனியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *