காமராஜர் வீழ்ச்சியும் கருணாநிதியின் எழுச்சியும், தமிழக அரசியலை மாற்றிய ரகசியம்
March 11, 2026

1967 தேர்தலில் காமராஜரின் வலுவான காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த திமுகவின் முக்கிய துருப்புச் சீட்டாக மு.கருணாநிதி திகழ்ந்தார். தேர்தல் நிதிக்காக ‘காகிதப்பூ’ நாடகம் மூலம் 11 லட்சம் ரூபாய் திரட்டி அண்ணாவின் நம்பிக்கையைப் பெற்றார். இந்த அசுர வளர்ச்சி கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்களிடையே மோதலை உருவாக்கினாலும், திமுக ஆட்சியைப் பிடிக்க இதுவே அடித்தளமாக அமைந்தது.
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை ஒழிப்பதில் தீவிரமாக இருந்த திமுக, நேருவுக்குப் பின் டெல்லியில் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு கவிழாமல் இருக்க 25 எம்பிக்களின் ஆதரவை வழங்கியது முரண்பாடான உண்மை. மாநில அரசியலில் எதிர்ப்பு, மத்தியில் ஆதரவு என திமுக கையாண்ட இந்த இரட்டை வியூகம் இந்திய அரசியல் வரலாற்றில் இன்றும் உற்றுநோக்கப்படுகிறது.