ஐந்து முறை தோல்வி அடைந்தும் மனம் தளராத சிருஷ்டி கோயல் இன்று யுபிஎஸ்சி தேர்வில் 160வது ரேங்க் பெற்று சாதனை
March 13, 2026

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த சிருஷ்டி கோயல், தனது ஆறாவது முயற்சியில் அகில இந்திய அளவில் 160வது ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார். பொறியியல் படிக்கும் போதே சமூக சேவை செய்ய விரும்பிய இவர், மூன்று முறை நேர்முகத் தேர்வு வரை சென்றும் தோல்வியைத் தழுவினார். இருப்பினும், அந்த ஏமாற்றங்களை வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றி இன்று ஐஏஎஸ் கனவை நனவாக்கியுள்ளார்.
சாதாரண வியாபாரக் குடும்பத்தில் பிறந்த சிருஷ்டி, தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதே வெற்றியின் ரகசியம் என்கிறார். சிவில் சர்வீஸ் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்பிய அவர், கடின உழைப்பால் இந்த இலக்கை எட்டியுள்ளார். தோல்வியால் துவண்டு போகும் மாணவர்களுக்கு, சிருஷ்டியின் இந்த ஐந்து ஆண்டுகால போராட்டமும் விடாமுயற்சியும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது.