எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக இன்று அறிவிப்பாரா பிரதமர் மோடி

திருச்சியில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என்றும் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முதன்முறையாகத் தெரிவித்துள்ள நிலையில், பிரதமரின் இன்றைய மேடைப் பேச்சு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை பாஜகவின் தேசியத் தலைமை இது குறித்து நேரடியான அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, பீகார் அரசியல் மாற்றங்களைச் சுட்டிக்காட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார். தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் பழனிசாமிக்கு மாற்றாக வேறு ஒருவரைப் பொதுச் செயலாளராக பாஜக தேர்ந்தெடுத்து வைத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த அரசியல் மோதல்களுக்கு மத்தியில், திருச்சியில் மோடி வெளியிடப்போகும் அறிவிப்பு தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.