உயிருடன் இருக்கும் மகளுக்கு ஈமச்சடங்கு செய்த பெற்றோர் கிராமத்தையே உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்
December 17, 2025

உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தின் சோப்ரா பகுதியில், காதலித்து திருமணம் செய்துகொண்ட மகளை இறந்தவராகக் கருதி அவரது பெற்றோர் ஈமச்சடங்குகளைச் செய்துள்ளனர். குடும்பத்தினர் எவ்வளவோ வற்புறுத்தியும் மகள் வீட்டிற்கு வர மறுத்ததால், அவருடன் இனி எந்த உறவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த இந்தத் தீவிர முடிவை அவர்கள் எடுத்துள்ளனர்.
சனிக்கிழமை நடைபெற்ற இந்த சடங்கில் உறவினர்களும் கிராம மக்களும் கலந்துகொண்டனர். பொதுவாக முன்னோர்களுக்காகச் செய்யப்படும் இந்த ‘ஸ்ராத்தம்’ சடங்கை, உயிருடன் இருக்கும் மகளுக்குச் செய்ததைக் கண்டு கிராமமே அதிர்ச்சியில் உறைந்தது. இந்த நிகழ்வின் போது குடும்பத்தினர் கதறி அழுதது காண்போரைக் கலங்கச் செய்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.