ஈரான் மோதலுக்கு நடுவே எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் வாங்குகிறது இந்தியா

மத்திய கிழக்கில் நிலவும் ஈரான் போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாட்டை சமாளிக்க, ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக 30 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. அமெரிக்க நிர்வாகத்திடம் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு 30 நாட்கள் சிறப்பு விலக்கு கிடைத்ததை அடுத்து இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி அளவு சுமார் 50 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல்கள் முடங்கியுள்ளதால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது, இது இந்தியாவின் மொத்த இறக்குமதியில் 40 சதவீதமாகும். இந்த நெருக்கடியை சமாளிக்க சர்வதேச கடல் பகுதியில் உள்ள ரஷ்ய கப்பல்களில் இருந்து விரைவாக எரிபொருளைப் பெற மோடி அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய சூழலில் சுமார் 40 நாடுகளின் வழியாக மாற்று வழிகளில் எண்ணெய் கொண்டு வரப்படுவதன் மூலம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை இந்தியா உறுதி செய்து வருகிறது.