இந்தியாவின் தங்கத் தலைநகரம் எது தெரியுமா இதோ ஆச்சரியமான தகவல்
February 1, 2026

கேரள மாநிலத்தின் திருச்சூர் நகரம் இந்தியாவின் தங்கத் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக இச்சரம் தங்க நகைகள் தயாரிப்பு, மொத்த விற்பனை மற்றும் சில்லறை வர்த்தகத்தின் மிகப்பெரிய மையமாகத் திகழ்கிறது. ஆயிரக்கணக்கான நகை உற்பத்தி பிரிவுகள் மற்றும் திறமையான கைவினைஞர்களின் வலையமைப்பு திருச்சூரை நாட்டின் தங்க வர்த்தகத்தின் முக்கிய இடமாக மாற்றியுள்ளது.
பாரம்பரிய மற்றும் நவீன வடிவமைப்புகளுக்குப் பெயர் பெற்ற இந்த நகரம், குறிப்பாக திருமணங்கள் மற்றும் திருவிழாக்களுக்கான பிரத்யேக நகைகளை வழங்குகிறது. 20-ஆம் நூற்றாண்டில் நிதி நிறுவனங்களின் வளர்ச்சி இந்தத் தொழிலை மேலும் வலுப்படுத்தியது. தென்னிந்தியாவின் பல முன்னணி நகை நிறுவனங்கள் இங்கிருந்தே வடிவமைப்புகளையும் மூலப்பொருட்களையும் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.