அதிரடி! ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜ்குமார் கோயல் நாட்டின் அடுத்த தலைமை தகவல் ஆணையர்

அதிரடி! ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜ்குமார் கோயல் நாட்டின் அடுத்த தலைமை தகவல் ஆணையர்

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராஜ்குமார் கோயல், நாட்டின் அடுத்த தலைமை தகவல் ஆணையராக (சிஐசி) திங்களன்று பதவியேற்கவுள்ளார். ஜனாதிபதி திரௌபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மூவர் கொண்ட குழு கோயலின் பெயரை பரிந்துரைத்திருந்தது.

கோயல் 1990 பேட்ச்சின் அருணாச்சல பிரதேசம்-கோவா-மிசோரம்-யூனியன் பிரதேசங்கள் (ஏஜிஎம்யுடி) பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஆவார். இந்த நியமனம் நாட்டின் தகவல் அறியும் உரிமைச் சட்ட அமலாக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *