வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு வழங்க மத்திய அரசின் அதிரடி திட்டம்
December 30, 2025

வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய குடிமக்கள், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய அரசு புதிய மற்றும் வலுவான வியூகத்தை மேற்கொண்டுள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளில் ‘ஒன் ஸ்டாப் சென்டர்கள்’ அமைக்கப்பட்டுள்ளன. இவை இந்திய பெண்களுக்கு சட்ட மற்றும் மனநல உதவிகளை வழங்குவதுடன், இந்தியாவுக்கு எதிரான சக்திகளின் செயல்பாடுகளையும் தீவிரமாக கண்காணிக்கும்.
கனடா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் இந்த மையங்கள் ஏற்கனவே செயல்படத் தொடங்கியுள்ளன. ‘இந்திய சமூக நல நிதி’ மூலம் ஆபத்தில் உள்ள குடிமக்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்தியாவின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் அதன் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கையின் வலிமையை பறைசாற்றுவதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.