விராட் கோலியின் 9 ஆண்டுகால சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள அபிஷேக் சர்மா
December 17, 2025

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா ஒரு புதிய மைல்கல்லை எட்ட உள்ளார். ஒரு காலண்டர் ஆண்டில் அதிக டி20 ரன்கள் எடுத்த விராட் கோலியின் சாதனையை முறியடிக்க அவருக்கு இன்னும் 47 ரன்கள் மட்டுமே தேவை. 2025-ல் இதுவரை 1568 ரன்கள் குவித்துள்ள அபிஷேக், இன்று லக்னோவில் கோலியின் 1614 ரன்கள் சாதனையை முந்த வாய்ப்புள்ளது.
தற்போது தொடரில் 2-1 என முன்னிலையில் உள்ள இந்திய அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற தீவிரமாக உள்ளது. இந்த ஆண்டில் மூன்று சதங்கள் விளாசியுள்ள அபிஷேக் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், இளம் வீரர் அபிஷேக் புதிய வரலாற்று சாதனை படைப்பாரா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.