மூன்று கணவர்கள் மற்றும் காதலால் வஞ்சிக்கப்பட்ட எச்ஐவி பாதித்த தாயின் கொடூர முடிவு

மும்பையின் திலக் நகர் பகுதியில் மூன்று கணவர்களால் கைவிடப்பட்ட 43 வயது பெண், தனது ஆறு மாத குழந்தையை தலையணையால் அமுக்கி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. திருமணங்களுக்குப் பிறகு காதலனாலும் ஏமாற்றப்பட்ட அந்த பெண், தனக்கும் தன் குழந்தைக்கும் எச்ஐவி தொற்று இருப்பதை அறிந்து இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். வறுமை மற்றும் சிகிச்சைக்கான பணமில்லாத காரணத்தால் அவர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.
குழந்தையை கொன்ற பிறகு, அந்த பெண் தனது வீட்டில் வேலை செய்யும் பெண்ணை கத்தியால் குத்த முயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். தானும் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டிருந்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். வேலையில்லா திண்டாட்டம் மற்றும் தொடர் ஏமாற்றங்களே இந்த நிலைக்கு தள்ளியதாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.