மாசுபாட்டைக் குறைக்க சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு வருமானத்தை விட மக்களின் ஆரோக்கியமே முக்கியம்
December 17, 2025

டெல்லி-என்சிஆர் பகுதியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, வருவாயை விட மக்களின் ஆரோக்கியமே முக்கியம் என்று உச்ச நீதிமன்றம் எம்சிடி-யை எச்சரித்துள்ளது. டோல் பிளாசாக்களில் ஏற்படும் நெரிசல் மாசுபாட்டிற்கு முக்கியக் காரணமாக இருப்பதால், அடுத்த ஆண்டு அக்டோபர் 1 முதல் ஜனவரி 31 வரை சுங்கக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
தலைமை நீதிபதி சூர்ய காந்த், இது குறித்து ஒரு வாரத்திற்குள் திட்டத்தைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். பொது சுகாதாரத்தைப் பாதித்து வருமானம் ஈட்ட முடியாது என்று கூறிய நீதிமன்றம், தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் எம்சிடி-க்கு ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.