மயக்க நிலையில் நோயாளி, அறுவை சிகிச்சை அறையில் நர்ஸுடன் மோதிய மருத்துவர், பொதுமக்கள் கடும் அதிர்ச்சி

செய்தி பிரிவு : உயிருக்கு போராடும் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நேரத்தில், ஒரு மருத்துவர் நர்ஸுடன் சண்டையிட்டால் சாமானிய மக்களின் நிலை என்னவாகும்? நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு, அறுவை சிகிச்சை அறையிலேயே ஒரு நர்ஸுடன் இந்த மருத்துவர் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் மீதான நம்பிக்கையை இந்த பொறுப்பற்ற செயல் கேள்விக்குறியாக்கியுள்ளது.
தனது காதலியைக் காப்பாற்றவே அந்த மருத்துவர் நர்ஸுடன் சண்டையிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த அறுவை சிகிச்சை நிபுணரின் மனைவியே அவரது கள்ளத்தொடர்புகளை அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் 19 உயர் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மருத்துவ முறைகளை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு அரசு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.