போர் சூழலால் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ரயில் பயணிகளுக்கு இனி மின்சார அடுப்பில் சமைத்த உணவா
March 11, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் எல்பிஜி கேஸ் விநியோகத்தில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி (IRCTC) தற்போது அதிரடியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ரயில்களில் பயணிகளுக்கு உணவு தயாரிக்கும் ஒப்பந்ததாரர்கள் இனி சமையல் எரிவாயுவுக்கு பதிலாக மைக்ரோவேவ் ஓவன் மற்றும் இண்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சர்வதேச விநியோகச் சங்கிலி பாதிப்பால் பயணிகளுக்கு உணவு கிடைப்பதில் எந்த தடங்கலும் ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த மின்சார சமையல் முறைக்கு மாற அறிவுறுத்தப்பட்டுள்ளது.