புதின் இல்லம் மீதான தாக்குதல் புகாரை திட்டவட்டமாக மறுத்தார் ஜெலென்ஸ்கி

புதின் இல்லம் மீதான தாக்குதல் புகாரை திட்டவட்டமாக மறுத்தார் ஜெலென்ஸ்கி

ரஷ்ய அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் திங்களன்று குற்றம் சாட்டினார். இருப்பினும் ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முற்றிலும் பொய்யானது என்று கூறி நிராகரித்துள்ளார். இத்தகைய தாக்குதலுக்கும் தங்கள் நாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

ரஷ்யா திட்டமிட்டு இத்தகைய அவதூறுகளைப் பரப்புவதாக ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டினார். அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை சீர்குலைப்பதற்காகவே கிரெம்ளின் இத்தகைய பொய்யான தகவல்களைக் கட்டவிழ்த்து விடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவின் இந்த செயல் சர்வதேச சமூகத்தை திசைதிருப்பும் முயற்சி என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *