நிலத்தகராறில் அண்ணனை கொன்ற சகோதரன்! சிமெண்ட் பைப்பிற்குள் அடைக்கப்பட்ட லல்லன் யாதவின் சடலம்

உத்தரப்பிரதேச மாநிலம் காஜிபூரில் சொத்து தகராறு காரணமாக லல்லன் யாதவ் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். காஜிபூர் பூர்வீகமாக இருந்தாலும் கொல்கத்தாவில் வசித்து வந்த லல்லனுக்கு, அவரது கிராமத்து நிலம் தொடர்பாக சகோதரன் ஹிராவுடன் நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்தது. குறைந்த விலைக்கு நிலத்தை வாங்க ஹிரா விரும்பியதே இந்த தகராறுக்கு காரணம். விசாரணையில், ஹிரா கூலிப்படையை ஏவி லல்லனைக் கொன்றது தெரிய வந்துள்ளது.
டிசம்பர் 2 ஆம் தேதி காஜிபூரிலிருந்து லல்லன் காணாமல் போனதாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. டிசம்பர் 4 ஆம் தேதி, நந்த்கஞ்ச் துர்னா பாலத்தின் அருகே சிமெண்ட் பைப்பிற்குள் லல்லனின் சிதைந்த சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரை இரும்பு ராடு மற்றும் மண்வெட்டியால் தாக்கி கொன்றதாகவும், கொலைக்குப் பிறகு சடலத்தை பைப்பிற்குள் வைத்து மறைத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான சகோதரன் ஹிரா யாதவ், ஹிராவின் மகன் அன்கிட் யாதவ் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்து, கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.