திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ராமதாஸ் கடும் கண்டனம்

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். செங்கல்பட்டு மற்றும் தூத்துக்குடியில் சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூர சம்பவங்களை சுட்டிக்காட்டிய அவர், குற்றங்களை தடுக்க முடியாத அரசு வெற்றுப் பெருமை பேசுவதாக சாடினார். தமிழகத்தின் ‘அப்பா’ என்று முதல்வர் கூறிக்கொள்வது வேதனையானது என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலத்தில் தடையின்றி கிடைக்கும் கஞ்சா மற்றும் மதுவே இதுபோன்ற குற்றங்களுக்கு முக்கிய காரணம் என அவர் குற்றம் சாட்டினார். பெண்களும் குழந்தைகளும் அச்சமின்றி வாழ வேண்டுமானால், அரசு மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். வெறும் விளம்பரங்களில் கவனம் செலுத்தாமல், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அரசை கேட்டுக்கொண்டார்.