தவறுதலாக வேறு ரயிலில் ஏறிவிட்டால் டிடிஇ உங்களை பாதியில் இறக்கிவிட முடியுமா இதோ முக்கிய விதிகள்

தவறுதலாக வேறு ரயிலில் ஏறிவிட்டால் டிடிஇ உங்களை பாதியில் இறக்கிவிட முடியுமா இதோ முக்கிய விதிகள்

அவசரத்தில் தவறான ரயிலில் ஏறுவது அல்லது காத்திருப்புப் பட்டியலிலுள்ள டிக்கெட்டுடன் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணிப்பது போன்ற சூழல்களில் பயணிகள் அச்சமடையத் தேவையில்லை. ரயில்வே விதிகளின்படி, உங்களிடம் சரியான டிக்கெட் இல்லையென்றாலும், ஒரு டிடிஇ உங்களை பாதியிலேயே ரயிலில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கிவிட முடியாது. பயணிக்க வேண்டிய தூரத்திற்கான கட்டணம் மற்றும் அபராதத்தைப் பெற்றுக்கொண்டு முறையான டிக்கெட்டை வழங்குவதே அவரது கடமையாகும்.

பெண்கள், முதியவர்கள் மற்றும் உடல்நலம் குன்றியவர்களுக்கு இந்த விதிகள் கூடுதல் பாதுகாப்பு அளிக்கின்றன. டிடிஇ உங்களை பொதுப் பெட்டிக்குச் செல்ல அறிவுறுத்தலாமே தவிர, முறையற்ற வகையில் மிரட்டவோ அல்லது ரசீது இன்றி பணம் கேட்கவோ அனுமதி இல்லை. ஏதேனும் புகார்கள் இருந்தால் பயணிகள் உடனடியாக 139 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது ‘ரயில் மதத்’ செயலி மூலம் தங்களது புகாரைப் பதிவு செய்து தீர்வு காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *